கீர்த்தனை 188 - எங்கேயாகினும் ஸ்வாமி
எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்
1. பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்
2. வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே
எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்
3. பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்
4. எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்
எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்
5. உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே
6. தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து
சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்
எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்
7. ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா
ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்
எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்
.jpg)
No comments:
Post a Comment