Monday, April 6, 2026

கீர்த்தனை 241 - சரணம் சரணம் சரணம் எனக்குன்

 கீர்த்தனை 241 - சரணம் சரணம் சரணம் எனக்குன்




சரணம் சரணம் சரணம் எனக்குன்
தயை புரியும் என் பரனே

மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என் 
மன்னா ஓசன்னா!

சரணம் சரணம் சரணம் எனக்குன்
தயை புரியும் என் பரனே

1. தரணிதனில் வந்தவதரித்த 
தற்பரனே எனக்காக - வலு 
மரணம் அடைந்தும் உயிர்த்தெழுந்ததென்
மகிமை நித்திய பெருமை

2. சுரர்கள் போற்றும் பரனே உனக்குத்
துரோகியான எனக்கு - நீயே
இரவு பகல் என் குறைவு நீக்க 
உண்டேது நலம் என்மீது 

3. தப்பின ஆடதற்கொத்த அடியேனைத்
தானே வந்து தேட - உனக்
கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக்
கற்புதமாம் முடி சூட!

4. எவ்வித நன்மைக்கும் காரணனே உனை
ஏழை அடியேனே - பற்றி
இவ்வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே
இரங்காய் எனக்கிரங்காய்! 
****************************************************


Wednesday, March 18, 2026

கீர்த்தனை 170 - என் உள்ளம் கவரும்

 கீர்த்தனை 170 - என் உள்ளம் கவரும்



என் உள்ளம் கவரும் நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட

என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
ரத்தம் தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை

என் உள்ளம் கவரும்

1. உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்
எந்தையே நானும்மைச் சேர்ந்தவனாயினும்
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட

என் உள்ளம் கவரும்

2. சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட
அத்தனே உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட

என் உள்ளம் கவரும்

3.  உந்தனடிதனில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்
என் தேவனே அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம்

என் உள்ளம் கவரும்

4.  அம்பரா மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு
என் பரனே உந்தன் அன்பின் ஆழத்தை நான்
இம்மையில் கூடியமட்டும் அறிந்திட

என் உள்ளம் கவரும் நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட

என் உள்ளம் கவரும்



Monday, February 23, 2026

கீர்த்தனை 059 - ஆமென் அல்லேலூயா

 கீர்த்தனை 059 - ஆமென் அல்லேலூயா





ஆமென் அல்லேலூயா! 
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா! 
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா

ஓம் அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த்தெழுந்தாரே உன்னதமே! 
ஆமென் அல்லேலூயா! 
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா

1. வெற்றி கொண்டார்ப்பரித்து – கொடும்வே
தாளத்தை சங்கரித்து – முறித்து
பத்ராசனக்கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத் தரித்து முடித்தார்

ஆமென் அல்லேலூயா! 
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா! 
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா

2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
ஜீவனே விடிந்து – தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது

ஆமென் அல்லேலூயா! 
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா! 
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா

3. வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்

ஆமென் அல்லேலூயா! 
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா! 
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
***************************

Tuesday, January 27, 2026

கீர்த்தனை 287 - ஓய்வு நாள் இது

கீர்த்தனை 287 - ஓய்வு நாள் இது


ஓய்வுநாள் இது மனமே தேவனின்
உரையைத் தியானம் செய் கவனமே

நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச்சுவிசேஷ வசனமே

 

1.       ஜீவ சுகபுத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக் கொள் இது சமயமே

 

2.       ஆறு நாளுனக்களித்தவர்

இளைப்பாறி ஏழினில் களித்தவர்
கூறும் பூரண ஆசீர்வாதத்தை
குறித்துனை இதற்கழைக்கிறார்

 

3.       கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண்பகல் மாலையும்
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம்

 

*****************************************************************



Sunday, January 18, 2026

கீர்த்தனை 252 - ஐயனே இவர்க்காசி

 கீர்த்தனை 252 - ஐயனே இவர்க்காசி



ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்
பொய்யாமிவ் வுலகாசையை விட்டு
மெய்யாய் உனை சார – என்றும்

1. பாவமும் ஜெகஜாலமும் விட்டுப்
பனுவலுரைப்படியே (வேத உரை) - வெகு
ஆவலாயுனது அருளினாலுயிர்
அடையக் கதியடைய – என்றும்

ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்

2. நற்றுதி செய்யும் பக்தராய் உந்தன்
பொற்றாளிணை போற்றி! – ஓங்கு
சற்குணமும் மெய்வாழ்வுமே பெற்று
சான்றோர் நெறி சார – என்றும்

ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்

3. இன்று தொட்டு இவர் என்றுமே உனை
சென்றே எங்கும் கூறி – பயன்
நன்றி பெற்று உயர் வென்றியுற்று இனி
ஒன்றி உயர்ந்தோங்க – என்றும்

ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்

4. அன்று சீடராய்ப் பன்னிருவரை
அழைத்தாய் தயை விளைத்தாய் - இவர்
என்றும் சபையில் ஒன்றிவைகிட (இணைந்திருக்க)
நின்றுன் கிருபை ஈவாய் – என்றும்

ஐயனே! இவர்க்காசி ஈகுவாய்
மெய்யாய் உனை சார – என்றும்
பொய்யாமிவ் வுலகாசையை விட்டு
மெய்யாய் உனை சார – என்றும்

****************************



Thursday, January 15, 2026

கீர்த்தனை 441 - பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

 கீர்த்தனை 441 - பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

இயேசு தேவா உம்மை மறவேனே

 

1. செய் பாவம் நினைத்து நான் அழுகின்றேன் அதை
செய்யாமல் இருந்திட பலமுமில்லை
மெய்யாக உம் துணை வேண்டுமய்யா எந்தன்
அய்யா நின் பிள்ளை நானல்லவா

 

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

இயேசு தேவா உம்மை மறவேனே

 

2. உள்ளத்தில் நல்லலெண்ணம் பல உண்டு ஆனால்
வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன்
உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் எந்தன்
உடலையே உமக்கெனத் தந்துவிட்டேன்

 

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

இயேசு தேவா உம்மை மறவேனே

 

3. மன்னவா உம்மிடம் ஓடி வந்தேன் பாவ
மன்னிப்பு உண்டென நம்பி வந்தேன்
மன்னிப்பு வழங்கினால் போதாது என்னை
மாற்றாமல் போய்விடில் வாழ்வேது

 

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

இயேசு தேவா உம்மை மறவேனே

 

கீர்த்தனை 084 - யேசு நசரையினதிபதியே

 கீர்த்தனை 084 - யேசு நசரையினதிபதியே

யேசு நசரையினதிபதியே 
பவநரர் பிணையென வரும்
யேசு நசரையினதிபதியே 
.
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே அமரர் பாவனே மகத்துவ

யேசு நசரையினதிபதியே 

1. இந்த உலகு சுவை தந்து போராடுதே
எனதுடலும் அதுவோடிசைந்து சீராடுதே
தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே
சாமி பாவியகம் நோயினில் வாடுதே 

யேசு நசரையினதிபதியே 
பவநரர் பிணையென வரும்
யேசு நசரையினதிபதியே 

2. நின் சுய பெலனல்லால் என் பெலன் ஏது
நினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது
தஞ்சம் உனை அடைந்தேன் தவற விடாது
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்

யேசு நசரையினதிபதியே 
பவநரர் பிணையென வரும்
யேசு நசரையினதிபதியே 

3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்
கேடுபாடுகள் யாவையும் தீரும்
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்
பொன்னுலகமதில் என்னையும் சேரும்

யேசு நசரையினதிபதியே 
பவநரர் பிணையென வரும்
யேசு நசரையினதிபதியே 
************************************



Monday, January 12, 2026

கீர்த்தனை 192 - அருமையுற நீ இறங்கி

 கீர்த்தனை 192 - அருமையுற நீ இறங்கி 


1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்
அருளொளி அன்பேயுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்து
அகமுழுதுமே நிறைந்து  வழிந்தோடும்

அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்

2.  திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
திவிய வரமாக வந்து எனதாகும்
தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
சிறுமை செயும் 'நான்' மறைந்து பறந்தோடி

அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்

3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்
மலர்முக சந்தோஷ பண்பும் சுடரான
மகிமையும் நின்னோடு வந்து எனதிதயமே நிரந்து
வளமை வரவே விளைந்து நிலையாக

அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்

4. உரிமையுடனே உவந்து மனமதியெல்லாம் கவர்ந்து
உனதடிமையாய்ப் பரிந்து எனையாளாய்
உனத சுனையாய் சுரந்து அடியருளமே விரிந்து
உதவு நதியாக வந்த பெருமானே

அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்
**********************************************