Friday, August 16, 2024

கீர்த்தனை 258 - தாரகமே பசி தாகத்துடன்

கீர்த்தனை 258 - தாரகமே பசி தாகத்துடன்





தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்
தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்
சீரும் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
சீரும் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
சேரும் யாரையும் ஒரு போதும் தள்ளிடே னென்றீர்

1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்
பாடுபட்டுயிர் விடுத்தீர் - பின்னும்
ஜீவ போஜன மெனக்கீய உமையே அந்த
சிலுவைதனிலே பகுத்தீர்
மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று
மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று
சேவித் துயிர் பிழைக்க தேவே உமையுட் கொள்ள

தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்

2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை
கண்டுபிடித்தி ரட்சித்தீர் - அது
பேணுதலுடன் பரிபூரண மடைந்திடப்
பேருல குதித்தே னென்றீர்
வேணுமுமது நீதி பூண நிறைவா யுந்தன்
வேணுமுமது நீதி பூண நிறைவா யுந்தன்
மாணருளுந் திருப்தி யானே பெற உம்மிடம்

தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்

3. தந்த திருவசனம் உந்தம் இராப்போஜனம்
தகமை எத்தனமாமே  - யான்
சிந்தை பணிந்தவற்றை எந்தன் மனதுட்கொள்ள
தேவசுத்தாவி தாமே
உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான்
சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே


தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்




கீர்த்தனை 255 - கர்த்தரின் பந்தியில் வா

கீர்த்தனை 255 - கர்த்தரின் பந்தியில் வா



கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா
 
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி 

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா
 
1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனாம் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட 

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா
 
2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு
பாவக் கேட்டைக் கூறு – ராப்போஜன பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே 

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா
 
 3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன் ஐக்யப் பந்தியாமே
துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா 

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா

கீர்த்தனை 251 - ஞானஸ்நான மா ஞான திரவியமே

 கீர்த்தனை 251 - ஞானஸ்நான மா ஞான திரவியமே



ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
திரு நாமம் நீரோடு சேர்

1. வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு
வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட
ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க
நல்ல தேவ நாமமதை சொல்லி ஜலம் வாருமென்ற 

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
திரு நாமம் நீரோடு சேர்

2.          தண்ணீராவியால் பிறவார் விண்ணகம் பெறாரெனவே
சத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்து
சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள்பூரியர்கள்
செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை 

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
திரு நாமம் நீரோடு சேர்

3.          கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக்
கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்!
அண்ணலார் பரிசுத்தாவி தன்னையுமிணைக்கு நேர்மை
அறிந்தவரே யிருகண் தெரிந்தவர் திருவருள் 

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
திரு நாமம் நீரோடு சேர்

********************************************************************************






கீர்த்தனை 109 - காலத்தின் அருமையை

 கீர்த்தனை 109 - காலத்தின் அருமையை


காலத்தின் அருமையை (KARAOKE)



காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே

ஞாலத்தில் பரனுனை நாட்டின நோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே

1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் ரட்சண்ய வாழ்வைக் கண்டு நீ மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? 

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே

2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
நோக்கிப் பின் அழித்தாரன்றோ?
தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருட முடியலாமே!

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே

3. முந்தி எரேமியா அனனியாவுக்குரைத்த
முடிவை நீ அறியாயோ?
எந்தக் காலமும் சிரஞ்சீவியென்றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? 

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே

4. இகத்தினில் ஊழியம் அகத்தியம் நிறைவேற
ஏசுனை அழைத்தாரல்லோ?
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்?

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
ஞாலத்தில் பரனுனை நாட்டினநோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே





கீர்த்தனை 238 - சேனைகளின் கர்த்தரே நின்

 கீர்த்தனை 238 - சேனைகளின் கர்த்தரே நின்








சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

வான வானங்கள் கொள்ளாத 
ஈன ஆன்மாவைத் தள்ளாத
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

1. திருவருளிலமே கணுறும் உணரும்
தெருளம்பகமே இனிதுறும் நிசமிது
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

2. ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

3. புவியோர் பதிவான் புகநிதியே
புனருயி ருறுமுழுக் கருளினிதே
புதுவிடமே புகுமனமே புதுமதியே
புரிவொடு இனிதருள்
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

4. பேயொடே புவி பேதை மாமிசம்
பேணிடா தடியாருனைப்
பேறு தந்தவனே யெனச் சொலி
பேணிடத் துணை ஈவையே
பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
பிசகொழியே திடமளியே
பெருமலையினிலரு முயிர்தரும்
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

5. ஆலய மது நிறைவாக
அவைக் குறை வொழிந்தேக
அவரவருனதில மெனமன விடர்சாக
அருளும் பொருளும் தெருளும் செறிந்திடும்
ஆலய பரனேச
ஆசுக மது வீச
ஆரண மொழி பேச
ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிகரெது?

சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே

வான வானங்கள் கொள்ளாத 
ஈன ஆன்மாவைத் தள்ளாத

சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
*******************


Monday, July 22, 2024

கீர்த்தனை 265 - பயந்து கர்த்தரின்

கீர்த்தனை 265 - பயந்து கர்த்தரின்




பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான் 
முயன்று உழைத்தே பலனை உண்பான் 
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் 
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் 
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்

2. ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன்பாலே 
மெலிவிலா நல்ல பாலருன்பாலே 
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்

கீர்த்தனை 227 - ஜீவ வசனம் கூறுவோம்

 கீர்த்தனை 227 - ஜீவ வசனம் கூறுவோம்


ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
 
பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதிபதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே.
 
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
 
1.         பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்
பட்டு மடியும் வேளையில்;
பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே.
 
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
 
2.         காடுதனிலே அலைந்தே, கிறிஸ்து யேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே;
நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய.
 
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
 
3.         விண்ணின் மகிமை துறந்தார்,-கிறிஸ்து நமை
மீட்கக் குருசில் இறந்தார்;
மண்ணின் புகழ், பெருமை எல்லாம் தூசு குப்பை என்
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு.
 
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
 
4.         பூலோகம் எங்கும் நமையே, கிறிஸ்து நாதர்
போகச் சொல்லி விதித்தாரே;
காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
கர்த்தன் வாக்கை நினைந்து எத்தேசமுந் திரிந்து.
 
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.



Sunday, July 21, 2024

கீர்த்தனை 095 - உந்தன் ஆவியே

 கீர்த்தனை 095 - உந்தன் ஆவியே





உந்தன் ஆவியே ஸ்வாமி எந்தன் மீதினில்
வந்து சேரவே அருள் தந்து காவுமே

 

1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே

 

2.சத்ய ஆவியை சீடர்க்கித்தரை விட
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே

 

3.பெந்தேகோஸ்தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே

 

4.மதி மயக்குதே பேயும் மன தியக்குதே
அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே

 

5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாசமாகவே அருள் நேச தேவனே

**************************************************************************