கீர்த்தனை 258 - தாரகமே பசி தாகத்துடன்
தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்
தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்
சீரும் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
சீரும் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
சேரும் யாரையும் ஒரு போதும் தள்ளிடே னென்றீர்
1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்
பாடுபட்டுயிர் விடுத்தீர் - பின்னும்
ஜீவ போஜன மெனக்கீய உமையே அந்த
சிலுவைதனிலே பகுத்தீர்
மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று
மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று
சேவித் துயிர் பிழைக்க தேவே உமையுட் கொள்ள
தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்
2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை
கண்டுபிடித்தி ரட்சித்தீர் - அது
பேணுதலுடன் பரிபூரண மடைந்திடப்
பேருல குதித்தே னென்றீர்
வேணுமுமது நீதி பூண நிறைவா யுந்தன்
வேணுமுமது நீதி பூண நிறைவா யுந்தன்
மாணருளுந் திருப்தி யானே பெற உம்மிடம்
தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்
3. தந்த திருவசனம் உந்தம் இராப்போஜனம்
தகமை எத்தனமாமே - யான்
சிந்தை பணிந்தவற்றை எந்தன் மனதுட்கொள்ள
தேவசுத்தாவி தாமே
உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான்
சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே
தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்










