கிறிஸ்தவக் கீர்த்தனைகள்
Saturday, August 15, 2026
கீர்த்தனை 433 - ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
Friday, August 7, 2026
கீர்த்தனை 373 - எளியவர்க்கு சொந்தம் இந்த
கீர்த்தனை 373 - எளியவர்க்கு சொந்தம் இந்த
எளியவர்க்கு சொந்தம் இந்த உலகம் என்று - நம்
இயேசு சொன்ன நல்ல காலம் வருமோ? என்று
ஒளியிழந்து விளங்குதவர் வாழ்வு இன்று - அவர்
உலகை என்று ஆள்வதோ தலை நிமிர்ந்து நின்று
1. இறைவனது இல்லமன்றோ இந்த உலகம் - அதில்
எல்லோர்க்கும் உரிமையுடன் உண்டு இடம்
அறைகளிலே கதவுகளோ எதுவுமில்லை - இங்கு
அன்புடனே வாழ்ந்திருந்தால் மறையும் தொல்லை
2. உள்ளமெனும் சோலையிலே அன்பு மலர்ந்தால் இந்த
உலகத்திலே சம உரிமை மணம் கமழும்
வெள்ளமென இறை அன்பு வழிந்தோடினால் - இங்கு
வறியவர்கள் வாழ்வினிலே வலிமை வரும்
3. தனி மனிதன் திருந்தி விட்டால் போதாது - இந்த
தாரணியே முழுத்திருப்பம் பெற வேண்டும்
இனிமேலே வரும் என்று இருந்திடாதே - இன்றே
எளியவர்கள் உணர்வூக்கம் பெற வேண்டும்
Friday, June 12, 2026
கீர்த்தனை 018 - சருவ வலிமை கிருபைகள்
கீர்த்தனை 018 - சருவ வலிமை கிருபைகள்
Thursday, June 4, 2026
கீர்த்தனை 186 - பக்தியாய் ஜெபம் பண்ணவே
கீர்த்தனை 186 - பக்தியாய் ஜெபம் பண்ணவே
Monday, May 11, 2026
கீர்த்தனை 101 - வரவேணும் பரனாவியே
கீர்த்தனை 101 - வரவேணும் பரனாவியே
Friday, May 1, 2026
கீர்த்தனை 396 - புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு
கீர்த்தனை 396 - புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு
பெருவாழ்வு
கிறிஸ்து தரும்வாழ்வு
1. பிறந்தவர் இறப்பது பொது மரபு – இங்கு
இறந்தவர்
எழுவதோ புதுச்சிறப்பு
இறைவனின்
திருமகன் உயிர்த்தெழுந்தார் – கொடும்
மரணத்தின்
பிடியினைத் தகர்த்தெறிந்தார்!
2. கல்லறை உலகினில் பல உண்டு – அவை
சொல்லிடும்
கதைகளில் கனிவுண்டு
வல்லவர்
இயேசுவின் கல்லறையோ – அவர்
இல்லையே
என்னிடம் என்றிடுதே!
3. இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி – அவர்
நேசரின்
வாழ்விலும் வரும் நிகழ்ச்சி
நாசமோ
மோசமோ நமக்கில்லை – விசு
வாசிகள் தமக்கு இறப்பில்லை.







