கீர்த்தனை 065 - சாலேமின் ராஜா
சாலேமின் ராஜா சங்கையின் ராஜா
ஸ்வாமி வாருமேன்
ஸ்வாமி வாருமேன் – இந்தத்
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்
1. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன
செல்வக் குமாரனே - இந்த
சீர்மிகும் மாந்தர்கள் தேடித் திரிகின்ற
செய்தி கேளீரோ?
2. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே - நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே
3. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே
4. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே – உந்தன்
சாட்சிகளுடைய ரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே
********************************************************


