Sunday, August 31, 2025

கீர்த்தனை 121 - உந்தன் சுயமதியே

 கீர்த்தனை 121 - உந்தன் சுயமதியே



உந்தன் சுயமதியே நெறி 
என்றுகந்து சாயாதே - அதில் நீ
மகிழ்ந்து மாயாதே 

1. மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் - தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் 
அருள் சூழாய் அருள் சூழாய்

2. சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு - அதின்
தந்திரப் போக்கை விட்டோடு 
கதி தேடு கதி தேடு

3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே - தீயர்
கெட்ட வழியில் நில்லாதே 
அது தீதே அது தீதே

4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே 
அதொண்ணாதே அதொண்ணாதே

5. நான் எனும் எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் - அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் 
மனஸ்தாபம் மனஸ்தாபம். 



Friday, August 15, 2025

கீர்த்தனை 281 - அதிகாலையில் உம்மைத் தேடுவேன்

 கீர்த்தனை 281 - அதிகாலையில் உம்மைத் தேடுவேன் 



அதிகாலையில் உமைத் தேடுவேன் முழுமனதாலே
தேவாசீர்வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே!

1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களுடன் இருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப் பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பங்கமில்லாமல் காரும் நீதா! 

2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும் போது
தப்பாது நின் கிருபை தாங்கிட வேணும் அப்போது
விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங்கொண்டு மெய்ப்பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? 

3. நரர் யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே! – தீ
நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியை நல் மாரி போலெனிலே பெய்யே!
புகழார நாதனே! வேத போதனே! பூரணமாய் உனைப்
போற்றுவேன் தினம் தினம் மெய்யே! 
***********************************************************







கீர்த்தனை 122 - வேறு ஜென்மம் வேணும்

 கீர்த்தனை 122 - வேறு ஜென்மம் வேணும் 



வேறு ஜென்மம் வேணும் – மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே
வேறு ஜென்மம் வேணும்

2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய
வேறு ஜென்மம் வேணும்

3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
வானவரின் அருள் தானமாக வரும்
வேறு ஜென்மம் வேணும்

4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய
வேறு ஜென்மம் வேணும்

5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்
வேறு ஜென்மம் வேணும்

6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்

வேறு ஜென்மம் வேணும் – மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.


Tuesday, August 5, 2025

கீர்த்தனை 332 - கிறிஸ்தவ இல்லறமே

 கீர்த்தனை 332 - கிறிஸ்தவ இல்லறமே



கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திட

கிருபை செய்வீர் பரனே

கிறிஸ்தவ இல்லறமே

 

பரிசுத்த மரியன்னை பாலன் யேசு யோசேப்பு

பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல

 

1. ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்

திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்

சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்

சுதனேசு தலைமையில் தூய வீடாகவும்

 

கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திட

கிருபை செய்வீர் பரனே

கிறிஸ்தவ இல்லறமே

 

2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்

உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம் போல

நாளும் யேசு பிரானை நல் விருந்தாளியாக்கி

நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டு

 

கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திட

கிருபை செய்வீர் பரனே

கிறிஸ்தவ இல்லறமே

 

3. அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்

அருமையாக நிறைந்தே அயலார்க் கொளிவிளக்காய்

துன்பம் செய்கிற பலதொத்து வியாதிகளை

தூரந்துரத்தும் வகை சொல்லி சேவையை செய்து

 

கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திட

கிருபை செய்வீர் பரனே

கிறிஸ்தவ இல்லறமே

 

4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே

மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று

கலை உடை உணவிலும் கல்வி முயற்சியிலும்

கர்த்தருக்கேற்ற பரிசுத்தக் குடும்பமாக

 

கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திட

கிருபை செய்வீர் பரனே

கிறிஸ்தவ இல்லறமே

************************

 





Monday, August 4, 2025

கீர்த்தனை 212 - வேத புத்தகமே

கீர்த்தனை 212 - வேத புத்தகமே









வேத புத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.

1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,
பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்பும் தேனே! 

2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றி,
பொன்னுலகத்தைக் காட்டி – போகும் வழி சொல்வாயே. 

3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே
இன்பமாகும் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. 

4. பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன் கனி;
உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார்


கீர்த்தனை 429 - இல்லத்தின் தலைவராய் இயேசு

 கீர்த்தனை 429 - இல்லத்தின் தலைவராய் இயேசு

இல்லத்தின் தலைவராய் இயேசு இருந்தால்
இல்லை என்பது இல்லையே

1.         நிறைவான வாழ்வினைத் தருவார் - தந்து
குறை யாவும் போக்கியே விடுவார்
மறைவான விருந்தினராவார் - இன்ப
மறை ஞான விருந்தினைத் தருவார்

2.         வழியாக வருபவர் அவரே - வழியில்
ஒளியாகத் திகழ்பவர் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே நம்மைத்
தழுவியே அணைப்பவர் அவரே

3.         அவர் பாதம் தொடர்ந்திட வேண்டும் - நித்தம்
அவர் பாதை நடந்திட வேண்டும்
அவர்போல் வாழ்ந்திட வேண்டும் - என்றும்
பிறர்க்காக உழைத்திட வேண்டும்
**********************************************