Tuesday, May 28, 2024

கீர்த்தனை 246 - வந்தருள் இவ்வாலயத்தில்

கீர்த்தனை 246 - வந்தருள் இவ்வாலயத்தில்
பாடல் : காபிரியேல் உபதேசியார்






வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை ஏகோவாவே உனை
வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே
அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி
ஆதரவாய் ஆண்டு கொள்வாய் ஆதி பராபரன் குமாரா

திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும் பொருட்டெழுந்து
தீய வினை மிதித் தழிப்பாய் ஜீவ பெருமானே
பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்க
உருக்கமுடன் இரங்கும் ஐயா உன் பதமே தஞ்சம் என்றும்

சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும்
தமியர் தமக் காறுதலாய்த் தயைசெய் ஆதிசேயா
செஞ் சொல் மலிந்த புலவர் செப்பு தமிழ்க் குகந்த உந்தன்
சீரடிக்கண் சேர்பவர்க்கே ஆருயிர் உண்டாவதற்கே

பூவுலகை ஆளும் மன்னர் போதம் உணர் வேதியர் உன்
பொற் பதத்தை அர்ச்சிக்கவே நற் பதம் தா தேவே
மூவுலகிலும் துதியும் முக்யம் மகத்துவம் கனமும்
மா பலமுமே உமக்கே மங்களம் உண்டாவதாக



Friday, May 24, 2024

கீர்த்தனை 188 - எங்கேயாகினும் ஸ்வாமி

 கீர்த்தனை 188 - எங்கேயாகினும் ஸ்வாமி



எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்


1. பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்
2. வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்

3. பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்
4. எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்

5. உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே
6.  தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து
சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்

7. ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா
ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்





Wednesday, May 22, 2024

கீர்த்தனை 009 - தேவ தேவனே எகோவா

 கீர்த்தனை 009 - தேவ தேவனே எகோவா





தேவ தேவனே எகோவா,
வா, என் ஜீவனே
 
காவலர்க் குபதேசனே
கனபாவிகட் கதிநேசனேஉயர்
கர்த்தன் ஏக திரித்துவ ஞான
மகத்துவ ராஜகிறிஸ்துவாகிய
 
தேவ தேவனே எகோவா,
வா, என் ஜீவனே
 
1. அந்த மேனியேகனம் பெரும்அனந்த ஞானியே
விந்தை மானியேசுதந்தரம்மிகுந்த தானியே
தந்தையர் தர, வந்தவா, - பசு
மந்தை யூடு பிறந்தவா,
தந்தையர் தர, வந்தவா, - பசு
மந்தை யூடு பிறந்தவா, - கதி
தந்தவா, சொல் உவந்தவா - மெய்
சிறந்தவா, விண்ணெழுந்தவா, திவ்ய
 
தேவ தேவனே எகோவா,
வா, என் ஜீவனே
 
2. சத்திய வாசனே, - அருள்மிகும் - தவிது மைந்தனே
நித்திய நேசனே, - அடியவர்நினையும் ஈசனே,
பத்தருக்குப காரனே, - வளர்
பெத்தலைக் கதிகாரனே
பக்தருக்குப காரனே, - வளர்
பெத்தலைக் கதிகாரனே, - கன
பாரனே, அதிதீரனே, நல்
உதாரனே, பெல வீரனே, ஜெய
 
தேவ தேவனே எகோவா,
வா, என் ஜீவனே
 
3. வான சீலனே, - மனு உரு - வான கோலனே
ஞான பாலனே, அதிசய - நன்மை நூலனே,
பானுவே மனுவேலனே, - இம்
மானுவேல் அனுகூலனே,
பானுவே மனுவேலனே, - இம்
மானுவேல் அனுகூலனே, - கன
பத்தியே தரு துத்தியமே, - நெடு
நித்தியமாய் வளர் வஸ்துவே ஒரு
 
தேவ தேவனே எகோவா,
வா, என் ஜீவனே



Tuesday, May 21, 2024

கீர்த்தனை 220 - ஏசுவைப் போல நட

 கீர்த்தனை 220 - ஏசுவைப் போல நட



*************************************************

ஏசுவைப் போல நட - என் மகனே!
ஏசுவைப் போல நட - இளமையில்
ஏசுவைப் போல நட
 
நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற
நேயமுடன் நர தேவனாய் வந்த
 
1.         பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்
பண்டிகைக்கு எருசலேம் நகர் வர
சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட
சீர்மிகு ஞானத்தை உள்ளந்தனிலெண்ணி
 
2.         சொந்தமாம் நாசரேத்து ஊரினில் வந்தபின்
சுத்தமாய் தந்தைக்கு உதவியாய் வளர்ந்து
எந்த நாளுங் கோணி எதிர்த்துப் பேசாது
இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த
 
3.         ஏனையிளைஞரோடு ஈனவழி செல்லா
எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று
ஞானம் தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு
நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன்
**************************************************************





Monday, May 20, 2024

கீர்த்தனை 239 - ஆலயம் போய்த்தொழ

 கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரரே,


”கிறிஸ்தவப் பாமாலைகளுடன் கீர்த்தனைகளையும் பதிவேற்றுங்கள்” என்று பலரிடமிருந்து தொடர்ச்சியாக வந்த அன்பு வேண்டுகோளைத் தொடர்ந்து கீர்த்தனைகளைப் பற்றியும் பதிவிடலாம் என்று எண்ணினேன்.

எங்கள் ஆலயத்தில் நாங்கள் பாடும் கீர்த்தனைகளை சிலவற்றைப் பதிவு செய்து YouTube பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ளேன்.

துவக்கத்தில், ஆலயத்தில் ஆராதனையின்போது பாடப்படும் பாடல்களை என் அலைபேசியில் பதிவு செய்து வந்தேன். அப்பாடல்களின் ஒலித்தரம் ஒழுங்கற்று இருந்த காரணத்தால் இப்போது Audio Mixer'ல் இருந்து பதிவு செய்து அப்பாடல்களைத் தரவேற்றுகிறேன்.  இப்படிப் பதிவு செய்யப்பட்ட கீர்த்தனைகளைக் கேட்க விரும்புவோர் இந்தத் ⇉ தளத்தில் அவற்றைக் கேட்கலாம்.  இதுவரை 94 கிறிஸ்தவக் கீர்த்தனைகளைப் தரவேற்றம் செய்ய ஆண்டவர் கிருபை செய்தார்.  Audio Mixer'ல் இருந்து நல்ல ஒலித்தரத்தில் பதிவு செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்ட கீர்த்தனைகளின் முன்னால் "HQ" என்று Prefix செய்துள்ளேன்.

ஆண்டவரின் அடியார்கள் ஜெபித்துஉபவாசித்துதங்கள் வாழ்வனுபவங்களில் இருந்து இயற்றிய பொருள் நிறைந்த பாமாலைகள் மற்றும் கிறிஸ்தவக் கீர்த்தனைகளின் சிறப்புகளை அறிய ஆவல் கொண்டிருக்கும் நம் சகோதரருடன் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பகிருங்கள்பொருளற்ற வார்த்தைகள்இரைச்சலான இசையுடன் கூடிய பாடல்களின்பால் ஈர்க்கப்பட்டுள்ளநம் ஆலயங்களின் இளம் தலைமுறையினர்க்கும்அடுத்த சந்ததியர்க்கும் இந்த பொக்கிஷங்களைக் கொண்டு சேர்ப்பது நம் கடமைஇந்த வலைத்தளத்தைத் தங்கள் நண்பர்கள் பட்டியலில் இருப்போருடன் பகிர்ந்துதங்கள் ஆதரவைத் தொடர்ந்து நல்குங்கள் !
  

இப்பக்கத்தை மேலும் மெருகூட்டபொருள் நிறைந்ததாக்க, இன்னும் அநேகர்க்குப் பயனுள்ளதாக்கத், தங்களின் மேலான கருத்துகள் / ஆலோசனைகளை எதிர்நோக்குகிறேன்.

கர்த்தர் ஒருவருக்கே எல்லா மகிமையும் !
***********************************************

கிறிஸ்தவக் கீர்த்தனை 239 - ஆலயம் போய்த்தொழ

’திருச்சபை’ / ‘தேவார்ச்சனை’ எனும் தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இக்கீர்த்தனையை எழுதியவர் திரு. ஜி.சே.வேதநாயகம் என்று நம் கீர்த்தனை புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனந்தபைரவி ராகத்தில், ஆதிதாளத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாடல் நம் ஆலயங்களில் மிக அரிதாகவே பாடப்படுகிறது. 

இப்பதிவில் நாங்கள் பாடியிருக்கும் ராகம்தான் இதன் மூல ராகமா அல்லது பின்னர் உருவாக்கப்பட்ட வேறேதும் ராகமா என்பது குறித்தத் தகவல் இல்லை. இங்கே இப்பாடல் பாடப்பட்டுள்ள ராகத்தை எங்கள் ஆலயத்தின் பாடகர் குழு தலைவர், ஒரு இசைப்பேழையில் கேட்டு எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இப்பாடலுக்கான இசையை நாங்கள் பாடியவண்ணமே எழுதி கீழே கொடுத்துள்ளேன்.

’திருச்சபை’ ‘ஆலயம்’ ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய ஞாயிறு ஆராதனைகளில் தியானிக்கவும், ஆலயப் பிரதிஷ்டை போன்ற சமயங்களில் பாடவும், இக்கீர்த்தனை உகந்தது.




ஆலயம் போய்த்தொழ வாருமென்ற தொனி
ஆனந்தப் பரவசம் அருளுதாத்துமந்தனில்

ஆலயந்தொழுவது சாலவும் நன்றென
ஆன்றோருரை நெறி சான்ற வாக்கானதே
ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும் பரன் – ஆலயம்

1.    பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்‌ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன் மாட்சி காணவே

2.    பூர்வமுதல் தொழும்பர் போந்தாலயந் தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்
ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி

3.    தனித்தியானத்துடன் சமுசார ஜெபம் நன்று
சபையாரோடர்ச்சனை தருதல் மிகவும் நன்று
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலங்கு சுடர்கள் போல உலகுக்கொளியே தந்து
எந்தையார் சுதன் சிந்தையில் வளர்ந்தென்றும் அன்பதில் ஒன்றவே திரு