Wednesday, March 18, 2026

கீர்த்தனை 170 - என் உள்ளம் கவரும்

 கீர்த்தனை 170 - என் உள்ளம் கவரும்



என் உள்ளம் கவரும் நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட

என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
ரத்தம் தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை

என் உள்ளம் கவரும்

1. உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்
எந்தையே நானும்மைச் சேர்ந்தவனாயினும்
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட

என் உள்ளம் கவரும்

2. சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட
அத்தனே உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட

என் உள்ளம் கவரும்

3.  உந்தனடிதனில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்
என் தேவனே அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம்

என் உள்ளம் கவரும்

4.  அம்பரா மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு
என் பரனே உந்தன் அன்பின் ஆழத்தை நான்
இம்மையில் கூடியமட்டும் அறிந்திட

என் உள்ளம் கவரும் நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட

என் உள்ளம் கவரும்