Monday, December 15, 2025

கீர்த்தனை 325 - வாரும் பெத்லகேம் வாரும்

கீர்த்தனை 325 - வாரும் பெத்லகேம் வாரும்


1. வாரும் பெத்லெகேம் வாரும் வாரும்
வரிசையுடனே வாரும்
வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
வாரும் விரைந்து வாரும்

2. எட்டி நடந்து வாரும் அதோ
ஏறிட்டு நீர் பாரும்
பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுது
பாரும் மகிழ்ந்து பாரும்

3. ஆதியிலத மேவை அந்நாள்
அருந்திய பாவவினை
ஆ திரிதத்துவ தேவன் 
மனிதத்துவமாயினர் இது புதுமை

4. விண்ணுலகாதிபதி தீர்க்கர்
விளம்பின சொற்படிக்கு
மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
மானிடனா யுதித்தார்

5. சொல்லுதற் கரிதாமே ஜோதி
சுந்தர சோபனமே
புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
பூபதிதான் பிறந்தார்

6. மந்தை மாடடையில் மாது
மரியவள் மடியதனில்
கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
காரணமாய் அணிந்தார்

7. தூதர் பறந்துவந்து தேவ
துந்துமி மகிழ்பாட
மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
மங்களமொடு நாட
******************************



 

Monday, December 1, 2025

கீர்த்தனை 033 - ஆ! அம்பர உம்பரமும்

 கீர்த்தனை 033 - ஆ! அம்பர உம்பரமும்


ஆ! அம்பர உம்பர மும் புகழும்திரு
ஆதிபன் பிறந்தார்

ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் 

1. அன்பான பரனே! அருள் மேவும் காரணனே! – நவ
அச்சய சச்சித ரட்சகனாகிய
உச்சிதவரனே! 

2. ஆதம் பாவமற நீதம் நிறைவேற – அன்று
அல்லிராவினில் தொல்லையிடையினில்
புல்லணையில் பிறந்தார் 

3. ஞானியர் தேட வானவர் பாட – மிக
நன்னய உன்னத பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார் 

4. கோனவர் நாட தானவர் கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரம் சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் 

5. விண்ணுடு தோண மன்னவர் பேண – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் 
**********



கீர்த்தனை 030 - பெத்தலகேம் ஊரோரம்

 கீர்த்தனை 030 - பெத்தலகேம் ஊரோரம்



1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..!
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

2. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் 
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் 
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்….நேரம்….!
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

3. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ? 
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ? 
ஆன பழங் கந்தை என்ன பாடோ? பாடோ…!
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

4. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி 
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி…மோடி…!
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

5. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு 
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு…கண்டு…. !
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி


கீர்த்தனை 066 - எனது கர்த்தரின் ராஜரீக நாள்

 கீர்த்தனை 066 -எனது கர்த்தரின் ராஜரீக நாள்


எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ?

 

மனிதசுதனின் அடையாளம்

விண்ணில் காணும் என்றாரே
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி

வருவேன் என்றாரே

 

1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே,
ஜீவனுள்ளோரும் அவருடன் மறு ரூபமாகவே,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே

 

2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே
பாவ மனுன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே

 

3. எருசலேமிலிருந்து ஜீவ நதிகள் ஓடுமே
ஏழைகள் மனமகிழ்ந்து கர்த்தரை த்திப் பாடுமே
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே
வானராஜ்ஜி சேனைகள் யாவும் வந்து கூடுமே

 

4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே
நித்திய ஜீவனைப் பெற ந்தன் மனம் துடிக்குமே




Tuesday, November 25, 2025

கீர்த்தனை 065 - சாலேமின் ராஜா

 கீர்த்தனை 065 - சாலேமின் ராஜா





சாலேமின் ராஜா சங்கையின் ராஜா
ஸ்வாமி வாருமேன் 
ஸ்வாமி வாருமேன் – இந்தத்
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்

1. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன
செல்வக் குமாரனே - இந்த
சீர்மிகும் மாந்தர்கள் தேடித் திரிகின்ற
செய்தி கேளீரோ?

2. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே - நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே

3. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே

4. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே – உந்தன்
சாட்சிகளுடைய ரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

********************************************************



Thursday, November 13, 2025

கீர்த்தனை 266 - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

 கீர்த்தனை 266 - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே



ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதம் தினம்பணிந்தே – இதோ!

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே.

1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய ளென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே – பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! 

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே.

2. பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களை சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ! 

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே.

3. முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிசரேல் – அவன்
நலம்பெற ஆதரித் தார் மறவேல் – இதோ! 

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே.


Tuesday, November 4, 2025

கீர்த்தனை 352 - மனம் இசைந்து அனைவரும்

கீர்த்தனை 352 - மனம் இசைந்து அனைவரும்




மனம் இசைந்து அனைவரும் உடன்பிறப்பாய்
தினம் வாழ்வது சிறப்பானது!
நன்மையானது இன்பமானது
மண்வாழ்வினில் பேரழகு!

மனம் இசைந்து அனைவரும் உடன்பிறப்பாய்
தினம் வாழ்வது சிறப்பானது!

1. அது - ஆரோனின் தலைமீது பொழிந்து
அவனது தாடியில் வழிந்து
அங்கியில் குழைந்து தொங்கலில் இழைந்து
கீழ் வடிந்திடும் பரிமளம் போன்றது!

2. அது - எர்மோனின் மலையதன் மேலும்
சீயோனின் சிகரங்கள் மீதும்
மெல்லெனக் கவிந்து சில்லெனக் குவிந்து
தினம் படர்ந்திடும் பனியினைப் போன்றது!

3. இன்று - இனம்மொழி பொருள்நிலை கொண்டு
எத்தனை பிரிவுகள் உண்டு?
அன்பினில் பகிர்ந்து இன்பமாய் இணைந்து
ஒன்றாய் இணைந்து வாழ்வதே அருளரசு! 
*******************************************************************







Wednesday, October 29, 2025

கீர்த்தனை 394 - உயிர்த்தெழுந்த ஆண்டவர்

கீர்த்தனை 394 - உயிர்த்தெழுந்த ஆண்டவர்


உயிர்த்தெழுந்த ஆண்டவர் உலகை வென்றவர்
உள்ளம் சோரும் வேளை வந்து உதவி செய்பவர்

1. முடிந்தது இவ்வாழ்வு என்னும் முன்னை பயம் வேண்டாம்
முடிவில் தொடரும் துளிரில் வாழ்வின் புதுமை பின் காண்போம்

2.  மரணம் கண்டோர் மறைந்தார் என்ற மனதுக்கம் வேண்டாம்
மரணம் வென்ற மன்னர் இயேசு நம்மோடிருக்கிறார்

3.  கல்லறையே கடைசிவீடு என்ற நிலைவேண்டாம்
கல்புரண்ட காட்சிதனை கணமே எண்ணுவோம்

4.  புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளதில்
புவியின் கண்ணீர் கவலை நோவு சாவு ஓய்ந்திடும்

*********




Tuesday, October 7, 2025

கீர்த்தனை 106 - ஒரு மருந்தரும் குரு மருந்து

 கீர்த்தனை 106 - ஒரு மருந்தரும் குரு மருந்து




ஒரு மருந்தரும் குரு மருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே

அருள் மருந்துடன் ஆனந்த மருந்து
ஆதியில் தானாய்  முளைத்த மருந்து
வரும் வினைகளை மாற்றும் மருந்து
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து

1. சிங்கார வனத்தில் செழித்த மருந்து
ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து
அங்கு வினை பவம் மாற்றும் மருந்து
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து

2. மோசே முதல் முன்னோர் காணா மருந்து
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து 
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து

3. தீராத குஷ்டத்தை தீர்த்த மருந்து
செவிடு குருடூமை தின்ற மருந்து 
மானா திரித்துவமான மருந்து 
மனுவாய் உலகினில் வந்த மருந்து

4. செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து 
ஜீவன் தவறா தருளும் மருந்து 
பக்தரை சுத்திகரித்திடும் மருந்து
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து 

***************************************************


Friday, September 19, 2025

கீர்த்தனை 264 - தேவனே யேசு நாதனே

 கீர்த்தனை 264 - தேவனே யேசு நாதனே



தேவனே யேசுநாதனே இத்
தேவ ஆலயம் வந்திடும்
தேவ ஆலயம் வந்தவர்க்கருள்
திவ்ய ஆவியை ஈந்திடும்

1. பாவிகள் உமக்காலயம் செய்யப்
பாத்திரர்களோ அல்லவே
பாவநாசராம் யேசுவே உம்மால்
பாத்ரராய் இதைச் செய்தனர்

2. கூடிவந் தும்மையே பணிந்திடக்
குறித்த இச்சிறு ஆலயம்
நாடி வந்தவர் யாவருக்குமுன்
நல்வசன முளதாகவும்

3. தேவனே உமக்கான ஆலயம்
பாவியின் சிறு நெஞ்சமே
பாவம் யாவையும் நீக்கியே சிறு
தேவ ஆலய மாக்கிடும்
*******************


Saturday, September 13, 2025

கீர்த்தனை 218 - பாக்கியர் இன்னார் என்றிறைவன்

கீர்த்தனை 218 - பாக்கியர் இன்னார் என்றிறைவன்




பாக்கியர் இன்னார் என்றிறைவன்
பண்புடன் சொன்னார்

ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே
அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில்

பாக்கியர் இன்னார் என்றிறைவன்
பண்புடன் சொன்னார்

1. ஆவி பணிந்தோர், மனத்தாழ்மையானதணிந்தோர்
பாவிகள் தாமென்று பயந்து நடப்போர்
தேவனின் ராஜியம் சேர்வதால் பாக்யர்

 

2. துக்கப்படுவோர், பவத்துக்காய்த் துயரப்படுவோர்
விக்கினமின்றி என் தேவன் அருளினால்
மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்யர்

 

3. சாந்த குணத்தோர், சண்டைகோபதாபம் வெறுத்தோர்,
வேந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர்
மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்யர்

 

4. நீதியின் பேரில் பசி தாகம் நித்தம் கொள்வோரில்
போத மெய் புத்தியும் பூரண பக்தியும்
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்யர்

 

5. இரக்கமுடையோர், பிறர் மீதுருக்கமுடையோர்
நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர்
பெருக்க இரக்கம் பெற்றிடும் பாக்யர்

 

6. சுத்தநெஞ்சத்தார், தேவனருன் சுகிர்த ஜென்மத்தார்
பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின்
பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்யர்

 

7. சமாதானத்தை நடப்பித்து சல்யம் வாதத்தை
தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர்
நமதேகன் சேயர்கள் என்னும் மெய் பாக்யர்

 

8. பகைஞரால் நஷ்டங்கள் பட்டு
துர்செய்கை நீங்கியே துன்பப்படுவோர்
சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்யர்