கீர்த்தனை 325 - வாரும் பெத்லகேம் வாரும்

எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ?
மனிதசுதனின் அடையாளம்
விண்ணில் காணும் என்றாரே
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி
வருவேன் என்றாரே
1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே,
ஜீவனுள்ளோரும் அவருடன் மறு ரூபமாகவே,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே
2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே
பாவ மனுஷன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே
3. எருசலேமிலிருந்து ஜீவ நதிகள் ஓடுமே
ஏழைகள் மனமகிழ்ந்து கர்த்தரை ஏத்திப் பாடுமே
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே
வானராஜ்ஜிய சேனைகள் யாவும் வந்து கூடுமே
4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே
நித்திய ஜீவனைப் பெற எந்தன் மனம் துடிக்குமே

ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே
அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில்
பாக்கியர் இன்னார் என்றிறைவன்
பண்புடன் சொன்னார்
1. ஆவி பணிந்தோர், மனத்தாழ்மையானதணிந்தோர்
பாவிகள் தாமென்று பயந்து நடப்போர்
தேவனின் ராஜியம் சேர்வதால் பாக்யர்
2. துக்கப்படுவோர், பவத்துக்காய்த் துயரப்படுவோர்
விக்கினமின்றி என் தேவன் அருளினால்
மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்யர்
3. சாந்த குணத்தோர், சண்டைகோபதாபம் வெறுத்தோர்,
வேந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர்
மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்யர்
4. நீதியின் பேரில் பசி தாகம் நித்தம் கொள்வோரில்
போத மெய் புத்தியும் பூரண பக்தியும்
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்யர்
5. இரக்கமுடையோர், பிறர் மீதுருக்கமுடையோர்
நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர்
பெருக்க இரக்கம் பெற்றிடும் பாக்யர்
6. சுத்தநெஞ்சத்தார், தேவனருன் சுகிர்த ஜென்மத்தார்
பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின்
பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்யர்
7. சமாதானத்தை நடப்பித்து சல்யம் வாதத்தை
தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர்
நமதேகன் சேயர்கள் என்னும் மெய் பாக்யர்
8. பகைஞரால் நஷ்டங்கள் பட்டு
துர்செய்கை நீங்கியே துன்பப்படுவோர்
சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்யர்