கீர்த்தனை 241 - சரணம் சரணம் சரணம் எனக்குன்
சரணம் சரணம் சரணம் எனக்குன்
தயை புரியும் என் பரனே
மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்
மன்னா ஓசன்னா!
சரணம் சரணம் சரணம் எனக்குன்
தயை புரியும் என் பரனே
1. தரணிதனில் வந்தவதரித்த
தற்பரனே எனக்காக - வலு
மரணம் அடைந்தும் உயிர்த்தெழுந்ததென்
மகிமை நித்திய பெருமை
2. சுரர்கள் போற்றும் பரனே உனக்குத்
துரோகியான எனக்கு - நீயே
இரவு பகல் என் குறைவு நீக்க
உண்டேது நலம் என்மீது
3. தப்பின ஆடதற்கொத்த அடியேனைத்
தானே வந்து தேட - உனக்
கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக்
கற்புதமாம் முடி சூட!
4. எவ்வித நன்மைக்கும் காரணனே உனை
ஏழை அடியேனே - பற்றி
இவ்வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே
இரங்காய் எனக்கிரங்காய்!
****************************************************
