Sunday, April 28, 2024

கீர்த்தனை 029 - மேசியா ஏசு நாயனார்

 கீர்த்தனை 029 - மேசியா ஏசு நாயனார்



மேசியா ஏசு நாயனார் எமை
மீட்கவே நரனாயினார்
 
1.         நேசமாய் இந்தக் காசினியோரின்
நிந்தை அனைத்தும் போக்கவே
மாசிலான் ஒரு நீசன் போலவே
வந்தார் எம் கதி நோக்கவே
 
2.         தந்தையின் சுதன் மாந்தர் பாதகம்
சகலமும் அற வேண்டியே
விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்
விண்ணுலகமும் தாண்டியே
 
3.         தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்
தோத்திரம் மிகப் பாடவும்
அண்டு பாவிகள் விண்ணடையவும்
ஆயர் தேடிக் கொண்டாடவும்
 
4.         தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரே
திருச்சுதன் மனுவேலனார்
பாவிகள் எங்கள் பாவம் மாறவே
பார்த்திபன் தேவ பாலனாய்
****************************
 



Saturday, April 27, 2024

கீர்த்தனை 206 - ஜெப சிந்தை எனில் தாரும்

 கீர்த்தனை 206 - ஜெப சிந்தை எனில் தாரும்




ஜெப சிந்தை எனில் தாரும் தேவா என்னை

அபயமென்றுனக்குக்கை
அளித்தேன் பொற்பாதா

ஜெப சிந்தை எனில் தாரும் தேவா

 

1. உண்மை மனதோடுன்னைக் கெஞ்ச

உலகெண்ணமெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச

பவ தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச

 

2. இடைவிடாமல் செய்யும் எண்ணம்

என் இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்
சடமுலகப் பேயை வெல்லும்

நற்சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம்

 

3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய

தகாநோக்கமெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய
பேய்க்கண மோடுபோர் செய்ய

நல் ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய