கீர்த்தனை 029 - மேசியா ஏசு நாயனார்
மேசியா ஏசு நாயனார் எமை
மீட்கவே நரனாயினார்
1. நேசமாய் இந்தக் காசினியோரின்
நிந்தை அனைத்தும் போக்கவே
மாசிலான் ஒரு நீசன் போலவே
வந்தார் எம் கதி நோக்கவே
2. தந்தையின் சுதன் மாந்தர் பாதகம்
சகலமும் அற வேண்டியே
விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்
விண்ணுலகமும் தாண்டியே
3. தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்
தோத்திரம் மிகப் பாடவும்
அண்டு பாவிகள் விண்ணடையவும்
ஆயர் தேடிக் கொண்டாடவும்
4. தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரே
திருச்சுதன் மனுவேலனார்
பாவிகள் எங்கள் பாவம் மாறவே
பார்த்திபன் தேவ பாலனாய்
****************************
மீட்கவே நரனாயினார்
1. நேசமாய் இந்தக் காசினியோரின்
நிந்தை அனைத்தும் போக்கவே
மாசிலான் ஒரு நீசன் போலவே
வந்தார் எம் கதி நோக்கவே
2. தந்தையின் சுதன் மாந்தர் பாதகம்
சகலமும் அற வேண்டியே
விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்
விண்ணுலகமும் தாண்டியே
3. தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்
தோத்திரம் மிகப் பாடவும்
அண்டு பாவிகள் விண்ணடையவும்
ஆயர் தேடிக் கொண்டாடவும்
4. தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரே
திருச்சுதன் மனுவேலனார்
பாவிகள் எங்கள் பாவம் மாறவே
பார்த்திபன் தேவ பாலனாய்
****************************

