Monday, July 22, 2024

கீர்த்தனை 265 - பயந்து கர்த்தரின்

கீர்த்தனை 265 - பயந்து கர்த்தரின்




பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான் 
முயன்று உழைத்தே பலனை உண்பான் 
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் 
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் 
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்

2. ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன்பாலே 
மெலிவிலா நல்ல பாலருன்பாலே 
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்

கீர்த்தனை 227 - ஜீவ வசனம் கூறுவோம்

 கீர்த்தனை 227 - ஜீவ வசனம் கூறுவோம்


ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
 
பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதிபதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே.
 
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
 
1.         பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்
பட்டு மடியும் வேளையில்;
பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே.
 
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
 
2.         காடுதனிலே அலைந்தே, கிறிஸ்து யேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே;
நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய.
 
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
 
3.         விண்ணின் மகிமை துறந்தார்,-கிறிஸ்து நமை
மீட்கக் குருசில் இறந்தார்;
மண்ணின் புகழ், பெருமை எல்லாம் தூசு குப்பை என்
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு.
 
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
 
4.         பூலோகம் எங்கும் நமையே, கிறிஸ்து நாதர்
போகச் சொல்லி விதித்தாரே;
காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
கர்த்தன் வாக்கை நினைந்து எத்தேசமுந் திரிந்து.
 
ஜீவ வசனம் கூறுவோம், சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.



Sunday, July 21, 2024

கீர்த்தனை 095 - உந்தன் ஆவியே

 கீர்த்தனை 095 - உந்தன் ஆவியே





உந்தன் ஆவியே ஸ்வாமி எந்தன் மீதினில்
வந்து சேரவே அருள் தந்து காவுமே

 

1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே

 

2.சத்ய ஆவியை சீடர்க்கித்தரை விட
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே

 

3.பெந்தேகோஸ்தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே

 

4.மதி மயக்குதே பேயும் மன தியக்குதே
அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே

 

5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாசமாகவே அருள் நேச தேவனே

**************************************************************************



Sunday, July 14, 2024

கீர்த்தனை 410 - மலை மா நதியோ

 கீர்த்தனை 410 - மலை மா நதியோ




மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே

 

1. பள்ளம் மேடு தடை தாண்டியே
பசாசின் கண்ணிக்கு நீங்கியே
உள்ளார்வத்துடன் விண் பார்வையுடன் நான்
மெள்ள மெள்ள நடந்தே - எந்தன்
மீட்பர் சிலுவை சுமப்பேனே

 

2. இன்னல் துயர் பிணி வாதையில்
ஈனரெனைத் தாக்கும் வேளையில்
துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே நான்
தூயன் பாதையில் ஊர்ந்தே - அவர்
தூய சிலுவை சுமப்பேனே

 

3. பூலோக மேன்மை நாடிடேன்
புவிமேவும் செல்வம் தேடிடேன்
சீலன் சிலுவை சிறியேன் மேன்மை என்
ஜீவன் வழி மறை இயேசுவே அவர்
ஜீவ சிலுவை சுமப்பேனே

*********************************************************





Tuesday, July 2, 2024

கீர்த்தனை 013 - தோத்திரம் புகழ் கீர்த்தனம்

கீர்த்தனை 013 - தோத்திரம் புகழ் கீர்த்தனம்

எழுதியவர் : மரியான் உபதேசியார்







தோத்திரம் புகழ் கீர்த்தனம் ஜெய சோபனம் உமக்கையா - துதி
சொல்லவும் தீதை வெல்லவும் அருள் சூட்டுவீர் கிறிஸ்தையா
 
கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா தேவபாலா
மனுவேலா மறைநூலா செங்கோலனு கூலா
 
1. எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர் நன் மனுவாய் - மறை
ஏற்றித் தினம் எனை ஆற்றிநன் மொழியால் தேற்றினீர் முற்றிலும் தனுவாய்
நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர் எத்தனை பரிவாய் தேவ
நீதியும் விளங்க செய்து பவமனு சாதிக்கிரங்கி நற்குருவாய்
நின்றீரே நடுவராய் நின்றீரே தீதை எலாம்
கொன்றீரே பிசாசையும் வென்றீரே ஜெயம் கொண்டீரே நித்திய
 
2. சுத்த சுவிசேஷ சத்தியமொழியை வித்தரிக்க வரம்தாரும் - நேய
சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்
நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்தி சித்தம் இரங்கிக் கண்பாரும் - கரம்
நீட்டிக் கிருபையை சூட்டிக் கவலையை ஓட்டி என் துயரைத் தீரும்
நில்லும் ஐயா என் பக்கத்தில் நில்லும் ஐயா தினம் நலம்
சொல்லும் ஐயா தீயோன் தனை வெல்லும் ஐயா தீதைக்
கொல்லும் ஐயா துய்யா
 
3.  நித்தியஜீவனைப் பெற்றும் மோடிருக்க சுத்தி கரித்தென்னை
ஆளும் - பவ
நிந்தையோ டென் சுய கந்தை அகற்றி மெய் விந்தைக் கிருபையால் சூழும்
சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில் வாழும் - பதம்
சாற்றித் தினம் உமைப் போற்றிப் பணிந்திடத் தேற்றி எனை அரசாளும்
சற்குருவே கிறிஸ்தெனும் சற்குருவே ஜீவன்உள
சொற்குருவே நித்யானந்த நற்குருவே பரப் பொற்குருவே தேவே
***********************************************