கீர்த்தனை 009 - தேவ தேவனே எகோவா
தேவ தேவனே எகோவா,
காவலர்க் குபதேசனே –
கர்த்தன் ஏக திரித்துவ ஞான
மகத்துவ ராஜகிறிஸ்துவாகிய
தேவ தேவனே எகோவா,
1. அந்த மேனியே – கனம் பெரும் – அனந்த ஞானியே
விந்தை மானியே – சுதந்தரம் – மிகுந்த தானியே
தந்தையர் தர, வந்தவா, - பசு
மந்தை யூடு பிறந்தவா,
மந்தை யூடு பிறந்தவா, - கதி
தந்தவா, சொல் உவந்தவா - மெய்
சிறந்தவா, விண்ணெழுந்தவா,
திவ்ய
தேவ தேவனே எகோவா,
2. சத்திய வாசனே, - அருள்மிகும்
- தவிது மைந்தனே
நித்திய நேசனே, - அடியவர் – நினையும் ஈசனே,
பெத்தலைக் கதிகாரனே,
பெத்தலைக் கதிகாரனே, - கன
பாரனே, அதிதீரனே, நல்
உதாரனே, பெல வீரனே, ஜெய
தேவ தேவனே எகோவா,
3. வான சீலனே, - மனு உரு -
வான கோலனே
ஞான பாலனே, அதிசய -
நன்மை நூலனே,
மானுவேல் அனுகூலனே,
மானுவேல் அனுகூலனே, - கன
பத்தியே தரு துத்தியமே, - நெடு
நித்தியமாய் வளர் வஸ்துவே ஒரு
தேவ தேவனே எகோவா,

No comments:
Post a Comment