கீர்த்தனை 121 - உந்தன் சுயமதியே
உந்தன் சுயமதியே நெறி
என்றுகந்து சாயாதே - அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
1. மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் - தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய்
அருள் சூழாய் அருள் சூழாய்
2. சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு - அதின்
தந்திரப் போக்கை விட்டோடு
கதி தேடு கதி தேடு
3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே - தீயர்
கெட்ட வழியில் நில்லாதே
அது தீதே அது தீதே
4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே
அதொண்ணாதே அதொண்ணாதே
5. நான் எனும் எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் - அதின்
மேல் நிற்குமே தேவ கோபம்
மனஸ்தாபம் மனஸ்தாபம்.

No comments:
Post a Comment