கீர்த்தனை 212 - வேத புத்தகமே
வேத புத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.
1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,
பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்பும் தேனே!
2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றி,
பொன்னுலகத்தைக் காட்டி – போகும் வழி சொல்வாயே.
3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே
இன்பமாகும் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே.
4. பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன் கனி;
உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார்


No comments:
Post a Comment