கீர்த்தனை 186 - பக்தியாய் ஜெபம் பண்ணவே
1. பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா
புத்தியோடுமைப் போற்ற நல்
சித்தம் ஈந்திடும் யேசுவே
பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா
2. பாவ பாதையை விட்டு நான்
ஜீவ பாதையில் சேர நல்
ஆவி தந்தெனை ஆட்கொள்ளும்
தேவ தேவ குமாரனே
பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா
3. பொய்யும் வஞ்சமும் போக்கியே
மெய்யும் அன்பும் விடாமல் யான்
தெய்வமே உனைச் சேவித்திங்கு
உய்யும் நல்வரம் உதவுவாய்
பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா
4. அப்பனே உனதன்பினுக்
கெப்படிப் பதில் ஈட்டுவேன்?
செப்பும் என்னிதயத்தையே
ஒப்படைத்தனன் உன்னதே
பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா
5. சிறுவன் நானுனை செவ்வையாய்
அறியவும் முழு அன்பினால்
நிறையுமுள்ள நிலைக்கவும்
இறைவனே வரம் ஈகுவாய்
பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா
6. அண்ணலே உனதாலயம்
நண்ணி நல்லுணர்வோடு உனை
எண்ணியெண்ணி இறைஞ்ச உன்
கண்ணில் இன்னருள் காட்டுவாய்
பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா
புத்தியோடுமைப் போற்ற நல்
சித்தம் ஈந்திடும் யேசுவே

No comments:
Post a Comment