Saturday, August 15, 2026

கீர்த்தனை 433 - ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து

 கீர்த்தனை 433 - ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து



ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக

1. ஆபிராம் போன்றே அனைவருக்கும்
ஆசீர்வாதமாய் அமைந்திடுவாய்
ஆபிராம் போன்றே அனைவருக்கும்
ஆசீர்வாதமாய் அமைந்திடுவாய்
மாபிரதானம் மாண்புறுதானம்
மாநில மீதில் நீ சமாதானம்

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக

2.  'ஆசி பொழியேல் அகலவிடேன்'
ஆவலின் ஏங்கல் அருள்வேண்டல்
'ஆசி பொழியேல் அகலவிடேன்'
ஆவலின் ஏங்கல் அருள்வேண்டல்
ஆசியடைந்த யாக்கோபு மீண்டும்
அன்பாய் ஏசாவுடன் இணையச் செய்த

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக

3.  பெண்களுள் மரியாள் ஆசி பெற்றாள்
பெண்குல மேன்மை அவள் ஈந்தாள்
பெண்களுள் மரியாள் ஆசி பெற்றாள்
பெண்குல மேன்மை அவள் ஈந்தாள்
எண்ணரும் பாடு இன்னல்கள் நேர்ந்தும்
எண்ணியே இறையுளம் இசைந்தது போல்

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக

4. 'இந்தச் சிறியோர்க் கெதைத் தரினும்
எனக்கே தருவீர்' எனும் இயேசு
'இந்தச் சிறியோர்க் கெதைத் தரினும்
எனக்கே தருவீர்' எனும் இயேசு
'எந்தையால் ஆசி பெற்றோரே வாரீர்'
என்றதும் வலதிட மகிழ்வேற்பாய்

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக



No comments:

Post a Comment