Saturday, August 15, 2026

கீர்த்தனை 433 - ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து

 கீர்த்தனை 433 - ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து



ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக

1. ஆபிராம் போன்றே அனைவருக்கும்
ஆசீர்வாதமாய் அமைந்திடுவாய்
ஆபிராம் போன்றே அனைவருக்கும்
ஆசீர்வாதமாய் அமைந்திடுவாய்
மாபிரதானம் மாண்புறுதானம்
மாநில மீதில் நீ சமாதானம்

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக

2.  'ஆசி பொழியேல் அகலவிடேன்'
ஆவலின் ஏங்கல் அருள்வேண்டல்
'ஆசி பொழியேல் அகலவிடேன்'
ஆவலின் ஏங்கல் அருள்வேண்டல்
ஆசியடைந்த யாக்கோபு மீண்டும்
அன்பாய் ஏசாவுடன் இணையச் செய்த

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக

3.  பெண்களுள் மரியாள் ஆசி பெற்றாள்
பெண்குல மேன்மை அவள் ஈந்தாள்
பெண்களுள் மரியாள் ஆசி பெற்றாள்
பெண்குல மேன்மை அவள் ஈந்தாள்
எண்ணரும் பாடு இன்னல்கள் நேர்ந்தும்
எண்ணியே இறையுளம் இசைந்தது போல்

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக

4. 'இந்தச் சிறியோர்க் கெதைத் தரினும்
எனக்கே தருவீர்' எனும் இயேசு
'இந்தச் சிறியோர்க் கெதைத் தரினும்
எனக்கே தருவீர்' எனும் இயேசு
'எந்தையால் ஆசி பெற்றோரே வாரீர்'
என்றதும் வலதிட மகிழ்வேற்பாய்

ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
அன்பின் சிறகில் காப்பாராக
ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து
அமைதியருளி ஆள்வாராக



Friday, August 7, 2026

கீர்த்தனை 373 - எளியவர்க்கு சொந்தம் இந்த

 கீர்த்தனை 373 - எளியவர்க்கு சொந்தம் இந்த




எளியவர்க்கு சொந்தம் இந்த உலகம் என்று - நம்

இயேசு சொன்ன நல்ல காலம் வருமோ? என்று


ஒளியிழந்து விளங்குதவர் வாழ்வு இன்று - அவர்

உலகை என்று ஆள்வதோ தலை நிமிர்ந்து நின்று


1.  இறைவனது இல்லமன்றோ இந்த உலகம் - அதில்

எல்லோர்க்கும் உரிமையுடன் உண்டு இடம்

அறைகளிலே கதவுகளோ எதுவுமில்லை - இங்கு

அன்புடனே வாழ்ந்திருந்தால் மறையும் தொல்லை


2.         உள்ளமெனும் சோலையிலே அன்பு மலர்ந்தால் இந்த

உலகத்திலே சம உரிமை மணம் கமழும்

வெள்ளமென இறை அன்பு வழிந்தோடினால் - இங்கு

வறியவர்கள் வாழ்வினிலே வலிமை வரும்


3.         தனி மனிதன் திருந்தி விட்டால் போதாது - இந்த

தாரணியே முழுத்திருப்பம் பெற வேண்டும்

இனிமேலே வரும் என்று இருந்திடாதே - இன்றே

எளியவர்கள் உணர்வூக்கம் பெற வேண்டும்