Friday, August 7, 2026

கீர்த்தனை 373 - எளியவர்க்கு சொந்தம் இந்த

 கீர்த்தனை 373 - எளியவர்க்கு சொந்தம் இந்த




எளியவர்க்கு சொந்தம் இந்த உலகம் என்று - நம்

இயேசு சொன்ன நல்ல காலம் வருமோ? என்று


ஒளியிழந்து விளங்குதவர் வாழ்வு இன்று - அவர்

உலகை என்று ஆள்வதோ தலை நிமிர்ந்து நின்று


1.  இறைவனது இல்லமன்றோ இந்த உலகம் - அதில்

எல்லோர்க்கும் உரிமையுடன் உண்டு இடம்

அறைகளிலே கதவுகளோ எதுவுமில்லை - இங்கு

அன்புடனே வாழ்ந்திருந்தால் மறையும் தொல்லை


2.         உள்ளமெனும் சோலையிலே அன்பு மலர்ந்தால் இந்த

உலகத்திலே சம உரிமை மணம் கமழும்

வெள்ளமென இறை அன்பு வழிந்தோடினால் - இங்கு

வறியவர்கள் வாழ்வினிலே வலிமை வரும்


3.         தனி மனிதன் திருந்தி விட்டால் போதாது - இந்த

தாரணியே முழுத்திருப்பம் பெற வேண்டும்

இனிமேலே வரும் என்று இருந்திடாதே - இன்றே

எளியவர்கள் உணர்வூக்கம் பெற வேண்டும்


No comments:

Post a Comment