கீர்த்தனை 101 - வரவேணும் பரனாவியே
வரவேணும் பரனாவியே
இலங்கும் சுடராய் மேவியே
மருளாம் (மயக்கும்) பாவம் மருவிய (தழுவிய) எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர
1. பலமான எப்பாவமும் பாழாக்கும் மா நோய்களும்
வலிய கொடும் ரோகமும் (வியாதியும்) மாம்ச சிந்தை ஓடுமே
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன்
எலியாவின் ஜெபத்துக் கிரங்கியவண்ணம்
வரவேணும் பரனாவியே
இலங்கும் சுடராய் மேவியே
2. எந்தன் பவம் யாவையும் எரிக்கும் வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்
எந்தன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக்கினி வர வேணும்
வரவேணும் பரனாவியே
இலங்கும் சுடராய் மேவியே
3. குடிகொள் எந்தப் பாவமும் அடியோடே தொலைத்திடும்
தடுத்தாட்கொள்ளும் தோஷமும் சாம்பலாக செய்திடும்
படிமிசை (பூமியின் மேல்) காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக்கனுதினம் பணி செய்ய
வரவேணும் பரனாவியே
இலங்கும் சுடராய் மேவியே

