Monday, May 11, 2026

கீர்த்தனை 101 - வரவேணும் பரனாவியே

 கீர்த்தனை 101 - வரவேணும் பரனாவியே


வரவேணும் பரனாவியே
இலங்கும் சுடராய் மேவியே

மருளாம் (மயக்கும்) பாவம் மருவிய (தழுவிய) எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர

1. பலமான எப்பாவமும் பாழாக்கும் மா நோய்களும்
வலிய கொடும் ரோகமும் (வியாதியும்) மாம்ச சிந்தை ஓடுமே
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன்
எலியாவின் ஜெபத்துக் கிரங்கியவண்ணம்

வரவேணும் பரனாவியே
இலங்கும் சுடராய் மேவியே

2. எந்தன் பவம் யாவையும் எரிக்கும் வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்
எந்தன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக்கினி வர வேணும்

வரவேணும் பரனாவியே
இலங்கும் சுடராய் மேவியே

3. குடிகொள் எந்தப் பாவமும் அடியோடே தொலைத்திடும்
தடுத்தாட்கொள்ளும் தோஷமும் சாம்பலாக செய்திடும்
படிமிசை (பூமியின் மேல்) காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக்கனுதினம் பணி செய்ய

வரவேணும் பரனாவியே
இலங்கும் சுடராய் மேவியே



Friday, May 1, 2026

கீர்த்தனை 396 - புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு

 கீர்த்தனை 396 - புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு




புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு – இது

பெருவாழ்வு கிறிஸ்து தரும்வாழ்வு

 

1.  பிறந்தவர் இறப்பது பொது மரபு – இங்கு

இறந்தவர் எழுவதோ புதுச்சிறப்பு

இறைவனின் திருமகன் உயிர்த்தெழுந்தார் – கொடும்

மரணத்தின் பிடியினைத் தகர்த்தெறிந்தார்!

 

2.  கல்லறை உலகினில் பல உண்டு – அவை

சொல்லிடும் கதைகளில் கனிவுண்டு

வல்லவர் இயேசுவின் கல்லறையோ – அவர்

இல்லையே என்னிடம் என்றிடுதே!

 

3.  இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி – அவர்

நேசரின் வாழ்விலும் வரும் நிகழ்ச்சி

நாசமோ மோசமோ நமக்கில்லை – விசு

வாசிகள் மக்கு இறப்பில்லை.