கீர்த்தனை 084 - யேசு நசரையினதிபதியே
யேசு நசரையினதிபதியே
பவநரர் பிணையென வரும்
யேசு நசரையினதிபதியே
.
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே அமரர் பாவனே மகத்துவ
யேசு நசரையினதிபதியே
1. இந்த உலகு சுவை தந்து போராடுதே
எனதுடலும் அதுவோடிசைந்து சீராடுதே
தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே
சாமி பாவியகம் நோயினில் வாடுதே
யேசு நசரையினதிபதியே
பவநரர் பிணையென வரும்
யேசு நசரையினதிபதியே
2. நின் சுய பெலனல்லால் என் பெலன் ஏது
நினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது
தஞ்சம் உனை அடைந்தேன் தவற விடாது
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்
யேசு நசரையினதிபதியே
பவநரர் பிணையென வரும்
யேசு நசரையினதிபதியே
3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்
கேடுபாடுகள் யாவையும் தீரும்
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்
பொன்னுலகமதில் என்னையும் சேரும்
யேசு நசரையினதிபதியே
பவநரர் பிணையென வரும்
யேசு நசரையினதிபதியே
************************************

No comments:
Post a Comment