கீர்த்தனை 059 - ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா!
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா!
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா!
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
ஓம் அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த்தெழுந்தாரே உன்னதமே!
ஆமென் அல்லேலூயா!
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
1. வெற்றி கொண்டார்ப்பரித்து – கொடும்வே
தாளத்தை சங்கரித்து – முறித்து
பத்ராசனக்கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத் தரித்து முடித்தார்
ஆமென் அல்லேலூயா!
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா!
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
ஜீவனே விடிந்து – தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது
ஆமென் அல்லேலூயா!
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா!
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
3. வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
ஆமென் அல்லேலூயா!
மகத்துவத்தம்பராபரா
ஆமென் அல்லேலூயா!
ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
***************************

No comments:
Post a Comment