Thursday, January 15, 2026

கீர்த்தனை 441 - பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

 கீர்த்தனை 441 - பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

இயேசு தேவா உம்மை மறவேனே

 

1. செய் பாவம் நினைத்து நான் அழுகின்றேன் அதை
செய்யாமல் இருந்திட பலமுமில்லை
மெய்யாக உம் துணை வேண்டுமய்யா எந்தன்
அய்யா நின் பிள்ளை நானல்லவா

 

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

இயேசு தேவா உம்மை மறவேனே

 

2. உள்ளத்தில் நல்லலெண்ணம் பல உண்டு ஆனால்
வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன்
உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் எந்தன்
உடலையே உமக்கெனத் தந்துவிட்டேன்

 

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

இயேசு தேவா உம்மை மறவேனே

 

3. மன்னவா உம்மிடம் ஓடி வந்தேன் பாவ
மன்னிப்பு உண்டென நம்பி வந்தேன்
மன்னிப்பு வழங்கினால் போதாது என்னை
மாற்றாமல் போய்விடில் வாழ்வேது

 

பாவம் என்னைத் தொடர்ந்தாலும்

இயேசு தேவா உம்மை மறவேனே

 

No comments:

Post a Comment