Monday, December 1, 2025

கீர்த்தனை 030 - பெத்தலகேம் ஊரோரம்

 கீர்த்தனை 030 - பெத்தலகேம் ஊரோரம்



1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..!
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

2. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் 
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் 
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்….நேரம்….!
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

3. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ? 
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ? 
ஆன பழங் கந்தை என்ன பாடோ? பாடோ…!
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

4. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி 
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி…மோடி…!
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

5. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு 
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு…கண்டு…. !
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி


No comments:

Post a Comment