கீர்த்தனை 266 - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!
நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதம் தினம்பணிந்தே – இதோ!
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே.
1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய ளென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே – பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ!
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே.
2. பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களை சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ!
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே.
3. முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிசரேல் – அவன்
நலம்பெற ஆதரித் தார் மறவேல் – இதோ!
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே.

No comments:
Post a Comment