கீர்த்தனை 033 - ஆ! அம்பர உம்பரமும்
ஆ! அம்பர உம்பர மும் புகழும்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார்
1. அன்பான பரனே! அருள் மேவும் காரணனே! – நவ
அச்சய சச்சித ரட்சகனாகிய
உச்சிதவரனே!
2. ஆதம் பாவமற நீதம் நிறைவேற – அன்று
அல்லிராவினில் தொல்லையிடையினில்
புல்லணையில் பிறந்தார்
3. ஞானியர் தேட வானவர் பாட – மிக
நன்னய உன்னத பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார்
4. கோனவர் நாட தானவர் கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரம் சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார்
5. விண்ணுடு தோண மன்னவர் பேண – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார்
**********

No comments:
Post a Comment