கீர்த்தனை 238 - சேனைகளின் கர்த்தரே நின்
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
திருவிலம் அளவற இனிதினிதே
வான வானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
1. திருவருளிலமே கணுறும் உணரும்
தெருளம்பகமே இனிதுறும் நிசமிது
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
2. ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
3. புவியோர் பதிவான் புகநிதியே
புனருயி ருறுமுழுக் கருளினிதே
புதுவிடமே புகுமனமே புதுமதியே
புரிவொடு இனிதருள்
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
4. பேயொடே புவி பேதை மாமிசம்
பேணிடா தடியாருனைப்
பேறு தந்தவனே யெனச் சொலி
பேணிடத் துணை ஈவையே
பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
பிசகொழியே திடமளியே
பெருமலையினிலரு முயிர்தரும்
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
5. ஆலய மது நிறைவாக
அவைக் குறை வொழிந்தேக
அவரவருனதில மெனமன விடர்சாக
அருளும் பொருளும் தெருளும் செறிந்திடும்
ஆலய பரனேச
ஆசுக மது வீச
ஆரண மொழி பேச
ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிகரெது?
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
வான வானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
*******************



No comments:
Post a Comment