கீர்த்தனை 251 - ஞானஸ்நான மா ஞான திரவியமே
ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
திரு நாமம் நீரோடு சேர்
1. வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு
வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட
ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க
நல்ல தேவ நாமமதை சொல்லி ஜலம் வாருமென்ற
ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
திரு நாமம் நீரோடு சேர்
2. தண்ணீராவியால் பிறவார் விண்ணகம் பெறாரெனவே
சத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்து
சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள்பூரியர்கள்
செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை
ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
திரு நாமம் நீரோடு சேர்
3. கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக்
கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்!
அண்ணலார் பரிசுத்தாவி தன்னையுமிணைக்கு நேர்மை
அறிந்தவரே யிருகண் தெரிந்தவர் திருவருள்
ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
திரு நாமம் நீரோடு சேர்
********************************************************************************

No comments:
Post a Comment