கீர்த்தனை 109 - காலத்தின் அருமையை
காலத்தின் அருமையை (KARAOKE)
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
ஞாலத்தில் பரனுனை நாட்டின நோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் ரட்சண்ய வாழ்வைக் கண்டு நீ மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ?
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
நோக்கிப் பின் அழித்தாரன்றோ?
தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருட முடியலாமே!
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
3. முந்தி எரேமியா அனனியாவுக்குரைத்த
முடிவை நீ அறியாயோ?
எந்தக் காலமும் சிரஞ்சீவியென்றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ?
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
4. இகத்தினில் ஊழியம் அகத்தியம் நிறைவேற
ஏசுனை அழைத்தாரல்லோ?
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்?
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
ஞாலத்தில் பரனுனை நாட்டினநோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே

No comments:
Post a Comment