Friday, May 1, 2026

கீர்த்தனை 396 - புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு

 கீர்த்தனை 396 - புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு




புது வாழ்வு நமக்குப் புதுவாழ்வு – இது

பெருவாழ்வு கிறிஸ்து தரும்வாழ்வு

 

1.  பிறந்தவர் இறப்பது பொது மரபு – இங்கு

இறந்தவர் எழுவதோ புதுச்சிறப்பு

இறைவனின் திருமகன் உயிர்த்தெழுந்தார் – கொடும்

மரணத்தின் பிடியினைத் தகர்த்தெறிந்தார்!

 

2.  கல்லறை உலகினில் பல உண்டு – அவை

சொல்லிடும் கதைகளில் கனிவுண்டு

வல்லவர் இயேசுவின் கல்லறையோ – அவர்

இல்லையே என்னிடம் என்றிடுதே!

 

3.  இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி – அவர்

நேசரின் வாழ்விலும் வரும் நிகழ்ச்சி

நாசமோ மோசமோ நமக்கில்லை – விசு

வாசிகள் மக்கு இறப்பில்லை.


1 comment: