கீர்த்தனை 231 - காணிக்கை தருவாயே
காணிக்கை தருவாயே கர்த்தர்க்குனது
காணிக்கை தருவாயே
காணிக்கை தருவாயே
காணிக்கை தா உனக்காய்
ஆணிக் குருசிலேசு
வேணும் ரட்சிப்பினை நீ
காணும்படி செய்ததால்
காணிக்கை தருவாயே
1. பத்தில் ஒரு பங்குதானோ
பத்தினில் கட்டுப் பட்ட யூதருக் கல்லவோ
அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்
பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ
பத்தினில் கட்டுப் பட்ட யூதருக் கல்லவோ
அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்
பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ
காணிக்கை தருவாயே
2. உந்தன் உடல் உன் சொந்தமோ
அதைவிடினும் உன்மனம் ஆவி பந்தமோ
அன்னவனுடைய தென்றறிந்து உணர்வாயானால்
உன்னையும் உன்னுடைய உடைமையுமல்லோ ஈவாய்
காணிக்கை தருவாயே
அதைவிடினும் உன்மனம் ஆவி பந்தமோ
அன்னவனுடைய தென்றறிந்து உணர்வாயானால்
உன்னையும் உன்னுடைய உடைமையுமல்லோ ஈவாய்
காணிக்கை தருவாயே
3. தேவ வசனம் பரப்ப
அதனுக்கென்று செல்லும் செலவை நிரப்ப
ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே
அதனுக்கென்று செல்லும் செலவை நிரப்ப
ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே
காணிக்கை தருவாயே
4. பயிர் பலன் மூலமாகவும்
இன்னும் பலர்க்குப் பணம் முதலானதாகவும்
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
உயிரைப் படைப்பாயோ உடைமையைக் கொடாவிடில்
இன்னும் பலர்க்குப் பணம் முதலானதாகவும்
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
உயிரைப் படைப்பாயோ உடைமையைக் கொடாவிடில்
காணிக்கை தருவாயே கர்த்தர்க்குனது
காணிக்கை தருவாயே
காணிக்கை தருவாயே

No comments:
Post a Comment