கீர்த்தனை 202 - நல்லாயன் யேசு சாமி
நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு
ஒரே மகவு ஆட்டுக்காய் உயிர் தாறார்
நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு
1. எல்லார்க்கும் பெரியான் எம்பிரான் தம்பிரான்
ஏகவஸ்தோரே ஏகோவா - மா
தேவ கிறிஸ்து நீ கா வா வா
நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு
2. மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய
வானப் பரமகு மாராவோ - அதி
ஞானத் திறம் மிகும் வீராவோ
நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு
3. விண்ணாடர் முழங்க மண்ணாடர் விளங்க
மேவி வந்தமே சையாவே - படு
பாவி சொந்தம் ஏசையாவே
நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு
4. சீராட்டுக் காட்டி எந்தையார் தந்தையார்
திருக்கடைக் கண்ணால் பார்த்தாரே - வந்து
திரும்பத் திரும்ப எனை சேர்த்தாரே
நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு
5. ஆட்டைக் கூட்டி ஓர் தொழுவத்தில் அடைப்பார்
அரிய நல்ல மேய்ச்சல் கொடுப்பார்
அன்பாகத் தோளினிலே எடுப்பார்
நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு
*******************

No comments:
Post a Comment