Tuesday, July 15, 2025

கீர்த்தனை 202 - நல்லாயன் யேசு சாமி

 கீர்த்தனை 202 - நல்லாயன் யேசு சாமி



நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு
ஒரே மகவு ஆட்டுக்காய் உயிர் தாறார் 
நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு

1.  எல்லார்க்கும் பெரியான் எம்பிரான் தம்பிரான்
ஏகவஸ்தோரே ஏகோவா - மா
தேவ கிறிஸ்து நீ கா வா வா

நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு

2.  மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய
வானப் பரமகு மாராவோ - அதி
ஞானத் திறம் மிகும் வீராவோ

நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு

3.  விண்ணாடர் முழங்க மண்ணாடர் விளங்க
மேவி வந்தமே சையாவே - படு
பாவி சொந்தம் ஏசையாவே 

நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு

4.  சீராட்டுக் காட்டி எந்தையார் தந்தையார்
திருக்கடைக் கண்ணால் பார்த்தாரே - வந்து
திரும்பத் திரும்ப எனை சேர்த்தாரே

நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு

5.  ஆட்டைக் கூட்டி ஓர் தொழுவத்தில் அடைப்பார்
அரிய நல்ல மேய்ச்சல் கொடுப்பார்
அன்பாகத் தோளினிலே எடுப்பார் 

நல்லாயன் யேசு சாமி ராஜா தாவீதுடை மகவு

*******************





No comments:

Post a Comment