கீர்த்தனை 228 – உந்தன் திருப்பணியை
உந்தன் திருப்பணியை உறுதியுடன் புரிய
உதவாத பாவி நானே
அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு
வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு
1. வேதனத்தின் (சம்பளம்) பொருட்டோ, மேலவர் நிமித்தமே
வெளியிட் டறிக்கை செய்யவோ? - உல
காதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்
அடைந்து ப்ரகாசிக்கவோ?
ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்
நீதிக்கெனை பலியாய் நேர்ந்துகொண்டுழைக்கேனோ?
2. வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டு
வெளியேறா தகம் துஞ்சினேன் – வேளைப்
பான முணவுபிந்த பலபிணி வருமென்ற
பயத்தாலே நித மஞ்சினேன்
கானகம் மலைசென்று கடும்பனி குளிர் வென்று
போனகம் (உணவு) நீரகன்று புவியிலுழைத்த யேசு
3. காடோ மலைநதியோ கடலோ கடந்தலுத்துக்
கஸ்தி மிகவே அடைந்து – உடல்
பாடும் கவலை நோயும் பசியும் நிர்வாணமும்
பகைவர் திருடர் மோசமும்
சாடக்கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்
ஓடத்தனை (உடல்) யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே
4. வண்டி வகைகளோடு வாழ்ந்தும் எனது கூடு
மயங்கி அயர்ந்து வாடுதே – இனி
என்று மிருப்பிடத்தில் இருந்து பணி புரிய
இசைந்தென் மனது நாடுதே
ஒன்றும் உதவியின்று ஊரே அலைந்து சென்று
நன்றே நிதம் புரிந்த நரனே பரனே யேசு
**************************************************
உதவாத பாவி நானே
வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு
வெளியிட் டறிக்கை செய்யவோ? - உல
காதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்
அடைந்து ப்ரகாசிக்கவோ?
ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்
நீதிக்கெனை பலியாய் நேர்ந்துகொண்டுழைக்கேனோ?
வெளியேறா தகம் துஞ்சினேன் – வேளைப்
பான முணவுபிந்த பலபிணி வருமென்ற
பயத்தாலே நித மஞ்சினேன்
கானகம் மலைசென்று கடும்பனி குளிர் வென்று
போனகம் (உணவு) நீரகன்று புவியிலுழைத்த யேசு
கஸ்தி மிகவே அடைந்து – உடல்
பாடும் கவலை நோயும் பசியும் நிர்வாணமும்
பகைவர் திருடர் மோசமும்
சாடக்கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்
ஓடத்தனை (உடல்) யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே
மயங்கி அயர்ந்து வாடுதே – இனி
என்று மிருப்பிடத்தில் இருந்து பணி புரிய
இசைந்தென் மனது நாடுதே
ஒன்றும் உதவியின்று ஊரே அலைந்து சென்று
நன்றே நிதம் புரிந்த நரனே பரனே யேசு
**************************************************


No comments:
Post a Comment