Friday, February 21, 2025

கீர்த்தனை 130 - பாவி இன்றே திரும்பாயோ?

கீர்த்தனை 130 - பாவி இன்றே திரும்பாயோ?



பாவி இன்றே திரும்பாயோ? நேச
ஆவியின் சத்தம் கேளாயோ?

மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக்
கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி 

பாவி இன்றே திரும்பாயோ?

1.         பாவம் தொடர்ந்து செல்லுமே - பாவ
சாபம் அடர்ந்து கொல்லுமே - உனின்ப
லாபம் எல்லாமே சாபம் காலமிதுவே காலம்
தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு 

பாவி இன்றே திரும்பாயோ?

2.         எத்தனை போதனை பெற்றாய் - ஐயையோ!
சுத்தமாய் சாதனை அற்றாய் - என்றாலும்
அத்தனை பாவத்தையும் முற்றுமாக வெறுத்து
அத்தனே தத்தம் செய்தேன் நித்தமும் காவுமென்று 

பாவி இன்றே திரும்பாயோ?

3.         கல்வாரியில் தொங்கினோர் யார்? - உனக்
கல்லோ நேசர் ஏங்கினார் பார்! - இன்னும்
பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகி
சொல்வோரையும் நிந்தித்து எல்லாக் கேட்டுக்குள்ளான 

பாவி இன்றே திரும்பாயோ?

4.         நிலையின்றலைகின்றோரே - ரத்த
விலை மதியாமல் சென்றோரே - போதும்
மலையாமல் (தயங்காமல்) யேசுவிடம் தொலையாத கவலை சொல்லி
உலையா (நீங்காத)  நம்பிக்கை வைத்து நிலையான ரட்சைபெற 

பாவி இன்றே திரும்பாயோ? நேச
ஆவியின் சத்தம் கேளாயோ?
பாவி இன்றே திரும்பாயோ?
**************************************************


No comments:

Post a Comment