கீர்த்தனை 015 - சுய அதிகாரா சுந்தரக்குமாரா
சுய அதிகாரா சுந்தரக் குமாரா
சொந்த உலகந்தனைத் துறந்த மரி மைந்தனான
சுய அதிகாரா சுந்தரக் குமாரா
1. அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையே
அதையொரு பம்பரம் போலிசைத்தனையே
துகில் போலாகாயமதை லகுவாய் சமைத்ததிலே
ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி அங்கிலங்க வைத்த
சுய அதிகாரா சுந்தரக் குமாரா
2. நரர் பலர் கூடியொரு மனை முடிக்க
நாளெலாம் உழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
மரமுயிர் தாது இன்னும் வான் புவி அனைத்தையும் ஓர்
வார்த்தையால் க்ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த
சுய அதிகாரா சுந்தரக் குமாரா
3. கரை மதகற்ற குளம் புவியிலுண்டோ?
கடலுக்கவன் சொல்லன்றிக் கரைகளுண்டோ?
திரை திரையாக ஜலம் மலைபோல் குவிந்தெழுந்தும்
சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய்ப் பாதுகாக்கும்
சுய அதிகாரா சுந்தரக் குமாரா
4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தாயே
பாவச்சுமை தோள் சுமந்து தீர்த்தாயே
சாமியுனைப் பற்றும் தேவ தாசருக் கிரங்க வேண்டும்
தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சுமனு கேட்டருள்வாய்
சுய அதிகாரா சுந்தரக் குமாரா
சொந்த உலகந்தனைத் துறந்த மரி மைந்தனான
சுய அதிகாரா சுந்தரக் குமாரா
*************************

No comments:
Post a Comment