Monday, June 17, 2024

கீர்த்தனை 426 - உயிர்த்தெழுந்தவா

கீர்த்தனை 426 - உயிர்த்தெழுந்தவா

பாடல் : எஸ். இஸ்ரவேல்























*********************

உயிர்த்தெழுந்தவா உடன் வருபவா
எங்கள் பந்தியில் எழுந்தருளவா

1
உலகைத் தந்தவா
உடலை தந்தவா
உயிரைத் தந்தவா
உணவைத் தந்தவா

2
உறவைத் தந்தவா
உரிமை தந்தவா
உறவை இழந்தும்
உணர்வில் நின்றவா


3
உண்மை உலகே
உருவில் இலங்க
உந்தன் உடலே
உருகச் செய்தவா


4
உயிரோடெழுந்தே
உலகை வென்றவா
உயிருக்குயிராய்
உள்ளுறைபவா


5
உந்தன் உடலாய்
உடையும் அப்பத்தை
உம் உதிரமாய்
ஊற்றும் இரசத்தை


6
உம் உணவினால்
எம் கண் திறந்தே
உம் போல் என்றுமே
உலகைக் காணுவோம்

 


No comments:

Post a Comment