கீர்த்தனை 426 - உயிர்த்தெழுந்தவா
பாடல் : எஸ். இஸ்ரவேல்
*********************
உயிர்த்தெழுந்தவா உடன் வருபவா
எங்கள் பந்தியில் எழுந்தருளவா
1 உலகைத் தந்தவா
உடலை தந்தவா
உயிரைத் தந்தவா
உணவைத் தந்தவா
2 உறவைத் தந்தவா
உரிமை தந்தவா
உறவை இழந்தும்
உணர்வில் நின்றவா
3 உண்மை உலகே
உருவில் இலங்க
உந்தன் உடலே
உருகச் செய்தவா
4 உயிரோடெழுந்தே
உலகை வென்றவா
உயிருக்குயிராய்
உள்ளுறைபவா
5 உந்தன் உடலாய்
உடையும் அப்பத்தை
உம் உதிரமாய்
ஊற்றும் இரசத்தை
6 உம் உணவினால்
எம் கண் திறந்தே
உம் போல் என்றுமே
உலகைக் காணுவோம்

No comments:
Post a Comment